தாராபுரத்தில் போக்குக் காட்டும் ராட்சத முதலை - பிடிக்க முடியாமல் திணறும் வனத்துறை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் சுற்றித்திரியும் 11 அடி நீள ராட்சத முதலையைப் பிடிக்கும் வனத்துறையினரின் முயற்சி 2வது நாளாகத் தோல்வியில் முடிந்தது. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் முதலையை வலை வீசி பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே ஆழமான பகுதியில் சுமார் 11 அடி நீளம் உள்ள ராட்சத முதலை ஒன்று நடமாடிவந்தது.கடந்த 15 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்திவந்த முதலை குறித்து தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது.



அதன் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக அமராவதி ஆற்றில் காங்கேயம் வனச்சரகர் தனராஜ் தலைமையில் 10 பேர் அடங்கிய வனத்துறை குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது முதலைக்காக விரித்து வைக்கப்பட்டிருந்த வலையை அறுத்துக் கொண்டு முதலை தப்பியது. இதனால், தேடுதல் பணி தொய்வடைந்தது.



இந்நிலையில், நேற்று காலை 10 மணி முதல் மீண்டும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை அமராவதி பழைய பாலம் அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே தண்ணீருக்குள் தலையை நீட்டி படுத்திருந்த முதலை அதற்குப்பின் தலைமறைவானது. இதனால் ஆற்றின் கரையோரம் முதலையை எதிர்பார்த்து இரவு வரை காத்திருந்த வனத்துறையினர் முதலையின் இருப்பிடம் தெரியாததால் 2வது நாள் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் முதலையை வலை வீசி பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் தேடுதல் வேட்டையிலும் முதலை பிடிக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...