குப்பைகளை தரம்பிரித்து சேகரித்த தூய்மைப் பணியாளர் - பாராட்டி பரிசு வழங்கிய கோவை ஆணையர்!

கோவை மாநகராட்சியில் அதிகளவு குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்த தூய்மை பணியாளர் வெண்ணிலா என்ற ஊழியரை, ஆணையர் மு. பிரதாப் நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்து பரிசு வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி அறிவுறுத்தியது. மேலும், ஒவ்வொரு வார்டுகளிலும் தெருக்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்து அகற்றி வருகின்றனர்.



குப்பைகள் முறையாக தரம் பிரித்து பெறப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று ஆய்வுகளும் செய்து வருகிறார். இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சிவதங்கம் நகர் பகுதியில் அதிக அளவிலான குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்த தூய்மை பணியாளர் வெண்ணிலா என்ற ஊழியரை, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பாராட்டி பரிசு வழங்கினார்.



அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மற்ற தெருக்களில் எவ்வாறு குப்பைகள் சேகரிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும் என அப்போது அவர் அறிவுறுத்தினார். மேலும், அதே பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளையும் ஆணையர் பிரதாப் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி சோமசுந்தரம், மரியராஜ் மற்றும் உதவியாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...