பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ சோதனை - இஸ்லாம் அமைப்பின் தலைவரிடம் தீவிர விசாரணை

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்க அமைப்பின் மாநில தலைவர் சையது ரகுமான் வீட்டில் என்.ஏ.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.



கோவை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த கார் வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.



அந்த வகையில், பொள்ளாச்சியில் உள்ள ஜோதி நகர் டி-காலனி, பி.ஆர்.கந்தசாமி வீதியில் உள்ள இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் அமைப்பின் மாநில தலைவர் உமரி (எ) சையது ரகுமான் (வயது 51) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை துறை துணை கண்காணிப்பாளர் பாண்டே தலைமையிலான 4 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்திவருகிறது.



மேலும், சையது ரகுமான், அவரது மனைவி பர்வீனா சுல்தான் உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் இந்தக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டுவருவதோடு, வீட்டில் உள்ள ஆவணங்களையும் ஆய்வு செய்துவருகிறது. இதனால், பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...