பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ சோதனை - இஸ்லாம் அமைப்பின் தலைவரிடம் தீவிர விசாரணை

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்க அமைப்பின் மாநில தலைவர் சையது ரகுமான் வீட்டில் என்.ஏ.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.



கோவை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த கார் வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.



அந்த வகையில், பொள்ளாச்சியில் உள்ள ஜோதி நகர் டி-காலனி, பி.ஆர்.கந்தசாமி வீதியில் உள்ள இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் அமைப்பின் மாநில தலைவர் உமரி (எ) சையது ரகுமான் (வயது 51) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை துறை துணை கண்காணிப்பாளர் பாண்டே தலைமையிலான 4 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்திவருகிறது.



மேலும், சையது ரகுமான், அவரது மனைவி பர்வீனா சுல்தான் உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் இந்தக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டுவருவதோடு, வீட்டில் உள்ள ஆவணங்களையும் ஆய்வு செய்துவருகிறது. இதனால், பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...