பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ சோதனை - இஸ்லாம் அமைப்பின் தலைவரிடம் தீவிர விசாரணை

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்க அமைப்பின் மாநில தலைவர் சையது ரகுமான் வீட்டில் என்.ஏ.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.



கோவை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த கார் வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.



அந்த வகையில், பொள்ளாச்சியில் உள்ள ஜோதி நகர் டி-காலனி, பி.ஆர்.கந்தசாமி வீதியில் உள்ள இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் அமைப்பின் மாநில தலைவர் உமரி (எ) சையது ரகுமான் (வயது 51) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை துறை துணை கண்காணிப்பாளர் பாண்டே தலைமையிலான 4 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்திவருகிறது.



மேலும், சையது ரகுமான், அவரது மனைவி பர்வீனா சுல்தான் உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் இந்தக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டுவருவதோடு, வீட்டில் உள்ள ஆவணங்களையும் ஆய்வு செய்துவருகிறது. இதனால், பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...