கோவை மாவட்டத்தில் ரூ.52 கோடி மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி

கோவை மாவட்டத்தில் 2,183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்கள் பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மகளிர் உதவிக் குழுக்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவையில் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 4 கூட்டுறவு நகர வங்கிகள், டியூகாஸ் என்கிற துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 29 கிளைகள் மூலம் சுய உதவிக் குழு கடன் வழங்கி வருகின்றது.



இந்த நிலையில் தமிழக அரசின் ஆணையின்படி 31.03.2021 அன்று வரை நிலுவையிலுள்ள சுய உதவிக்குழுக் கடன்களை அரசு தள்ளுபடி செய்துள்ளதால், கோவை மாவட்டத்தில் 2183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்களுக்கு பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.



இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாட்டி அனைவருக்கும் வழங்கினார்.



தொடர்ந்து வேப்ப புண்ணாக்கு, உரம் தயாரித்தல், நெல் விதை தரம் பிரித்தல் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.



இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியூகாஸ் மேலாண்மை இயக்குநர் சிவகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...