கோவை மாவட்டத்தில் ரூ.52 கோடி மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி

கோவை மாவட்டத்தில் 2,183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்கள் பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மகளிர் உதவிக் குழுக்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவையில் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 4 கூட்டுறவு நகர வங்கிகள், டியூகாஸ் என்கிற துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 29 கிளைகள் மூலம் சுய உதவிக் குழு கடன் வழங்கி வருகின்றது.



இந்த நிலையில் தமிழக அரசின் ஆணையின்படி 31.03.2021 அன்று வரை நிலுவையிலுள்ள சுய உதவிக்குழுக் கடன்களை அரசு தள்ளுபடி செய்துள்ளதால், கோவை மாவட்டத்தில் 2183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்களுக்கு பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.



இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாட்டி அனைவருக்கும் வழங்கினார்.



தொடர்ந்து வேப்ப புண்ணாக்கு, உரம் தயாரித்தல், நெல் விதை தரம் பிரித்தல் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.



இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியூகாஸ் மேலாண்மை இயக்குநர் சிவகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...