திருப்பூர் மாவட்ட பாஜக ஊடக பிரிவு தலைவர் மறைவு - நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அண்ணாமலை!

திருப்பூர் மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நரேன் பாபு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


திருப்பூர்: சமீபத்தில் மறைந்த திருப்பூர் மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு தலைவரின் வீட்டுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பாஜக கட்சியின் ஊடக பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த நரேன் பாபு, கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள நரேன் பாபுவின் வீட்டிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.



மேலும், அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஊடக பிரிவு தலைவர் நரேன் பாபு புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



இதனையடுத்து, கோவையில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்விற்கு கலந்து கொள்ள சென்றார். இதில், கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...