கோவை அருகே பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி - தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை!

கோவைப்புதூர் அருகே கொரியர் கொடுப்பது போல் வந்த நபர், திடீரென பெண்ணை கத்தியால் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அடுத்த கோவைப்புதூர் தில்லை நகரை சேர்ந்தவர் மோதிலால் ஐடி நிறுவன ஊழியர்.



இவரது மனைவி சங்கீதா (வயது40), இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் வீட்டில் இருந்தபோது கொரியர் வந்ததாக சங்கீதாவை இளைஞர் ஒருவர் வெளியே அழைத்துள்ளார். அப்போது கொரியரை கொடுத்த அந்த நபர், சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.



அப்போது, சங்கீதா சத்தம் போட்டதால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்ததால், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, சங்கீதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தை அறுத்து செயினை திருட முயன்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...