உடுமலையில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்!

நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அலுவலகம் முன்பு சி ஐ டி யு உடுமலை நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில், 2014 ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் ஒழுங்கு சட்டத்தின் முறையை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், உடுமலை நகர பகுதியில் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி மூலம் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள், தலை சுமையாக ஈடுபடும் தொழிலாளர்களை முறையாக கணக்கெடுக்க செய்ய வேண்டும். நடைபாதை வியாபாரிகள் அனைவருக்கும் தள்ளுவண்டி வழங்கிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வங்கிக் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனை குழு கூட்டத்தை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும். பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...