உடுமலையில் தளி எத்தலப்ப நாயக்கருக்கு நினைவு அரங்கம் - முதல்வர் அடிக்கல் நாட்டல்!

கடந்த அதிமுக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் தளி எத்தலப்ப நாயக்கருக்கு சிலை மற்றும் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் தளி எத்தலப்ப நாயக்கருக்கு திருவுருவ சிலை மற்றும் நினைவு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.10லட்சம் மதிப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கர் திரு உருவச் சிலையும், திருமூர்த்திமலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.



இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.



இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகர மன்ற துணைத் தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்குக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிலை மற்றும் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அப்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜு சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் சிலை மற்றும் நினைவு அரங்கம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மூலம் உடுமலை பகுதி வரலாற்று ஆய்வு மையநிர்வாகிகள், வீரபாண்டிய கட்டபொம்மன் கழகம் நிர்வாகிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...