அறிவித்த ஊதியம் ரூ.648.. ஆனா கிடைப்பதோ ரூ.421 தான்..! - கோவை மேயரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.648 சம்பளம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரூ.421 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: மாமன்றத்தில் நிறைவேற்றிய சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தூய்மை பணியாளர்கள், முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அறிவித்த 721 ரூபாய் சம்பளத்தை வழங்கிட வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இந்த நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கப்பட்டது.

கோவை மாநகராட்சி விக்டோரியா மஹாலில் கடந்தாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ. 648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மாநகராட்சி மன்றத்தில் 648 ரூபாய் என அறிவித்துவிட்டு, 421 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த தூய்மை பணியாளர்கள், கோவை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோரை சூழ்ந்தனர்.



தொடர்ந்து மாமன்றத்தில் அறிவித்த சம்பளம் ஏன் வழங்கவில்லை என ஆணையாளரிடம் கேள்வி எழுப்பினர்.



பின்னர் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஆணையர் மற்றும் மேயரை முற்றுகையிட்டு அறிவித்த சம்பளம் கைக்கு வர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளம் வேண்டும் எனவும் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறுகையில், இ.எஸ்.ஐ, பி எப்., பணம் பிடித்தது போக தான் தற்போது சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தூய்மை பணியாளர்கள் தீர்மானத்தில் அறிவித்த சம்பளம் கைக்கு வரவேண்டும் என தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் கூறுகையில், மாமன்றத்தில் அறிவித்த 648 ரூபாய் சம்பளம் தராமல் சம்பளத்தை குறைத்து தந்துள்ளனர். தற்போது 415 தான் கைக்கு வருகிறது. இரண்டு நேரம் வேலை வாங்குகின்றனர். தொழிலாளர்களை ஏமாற்றும் போக்கில் மாநகராட்சி செயல்படுகிறது.

தொழிலாளிகளின் உழைப்பை மாநகராட்சி சுரண்டுகிறது. தற்போது கூட்டமைப்பில் பேசி முடிவெடுத்து மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று எச்சரித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...