அறிவித்த ஊதியம் ரூ.648.. ஆனா கிடைப்பதோ ரூ.421 தான்..! - கோவை மேயரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.648 சம்பளம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரூ.421 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: மாமன்றத்தில் நிறைவேற்றிய சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தூய்மை பணியாளர்கள், முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அறிவித்த 721 ரூபாய் சம்பளத்தை வழங்கிட வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இந்த நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கப்பட்டது.

கோவை மாநகராட்சி விக்டோரியா மஹாலில் கடந்தாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ. 648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மாநகராட்சி மன்றத்தில் 648 ரூபாய் என அறிவித்துவிட்டு, 421 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த தூய்மை பணியாளர்கள், கோவை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோரை சூழ்ந்தனர்.



தொடர்ந்து மாமன்றத்தில் அறிவித்த சம்பளம் ஏன் வழங்கவில்லை என ஆணையாளரிடம் கேள்வி எழுப்பினர்.



பின்னர் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஆணையர் மற்றும் மேயரை முற்றுகையிட்டு அறிவித்த சம்பளம் கைக்கு வர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளம் வேண்டும் எனவும் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறுகையில், இ.எஸ்.ஐ, பி எப்., பணம் பிடித்தது போக தான் தற்போது சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தூய்மை பணியாளர்கள் தீர்மானத்தில் அறிவித்த சம்பளம் கைக்கு வரவேண்டும் என தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் கூறுகையில், மாமன்றத்தில் அறிவித்த 648 ரூபாய் சம்பளம் தராமல் சம்பளத்தை குறைத்து தந்துள்ளனர். தற்போது 415 தான் கைக்கு வருகிறது. இரண்டு நேரம் வேலை வாங்குகின்றனர். தொழிலாளர்களை ஏமாற்றும் போக்கில் மாநகராட்சி செயல்படுகிறது.

தொழிலாளிகளின் உழைப்பை மாநகராட்சி சுரண்டுகிறது. தற்போது கூட்டமைப்பில் பேசி முடிவெடுத்து மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று எச்சரித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...