மகா சிவராத்திரி விழா - ஆட்டம், பாட்டம் என அதிரடியாக நடத்த தயாராகும் ஈஷா!

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவிற்காக தமிழ் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் உள்பட பல்வேறு மொழி பாடகர்கள் மற்றும் நடன குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை ஈஷா மையத்தில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாசிவராத்திரி விழாவை கோலாகலமாக நடத்த ஈஷா அமைப்பு தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக ஈஷா யோகா மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலகில்‌ வேறு எந்த கலாச்சாரத்திலும்‌ இல்லாத வகையில்‌, நம்‌ தமிழ்‌ கலாச்சாரத்தில்‌ தான்‌ 'நடனம்‌ ஆடும்‌ ஒருவரை' கடவுளாகவும்‌ யோகியாகவும்‌ போற்றி கொண்டாடுகிறோம்‌.

இந்த முழு பிரபஞ்சமே ஒரு விதமான நடனத்தில்‌ இயங்குகிறது என நவீன அறிவியலாளர்கள்‌ கண்டறிந்துள்ளனர்‌. இதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உள்நிலையில்‌ உணர்ந்த யோகிகள்‌ பிரபஞ்ச கூத்தனான சிவனுக்கு சிதம்பரத்தில்‌ கோவில்‌ கட்டியுள்ளனர்‌.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்‌ மண்ணில்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. சிவனுக்கு உகந்த இந்த ராத்திரியில்‌ அவருடைய நடராஜர் அம்சத்தை மக்கள்‌ அனுபவ பூர்வமாக உணர்ச்சி நிலையில்‌ உணர்வதற்காக இவ்விழாவில்‌ பல்வேறு விதமான இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகள்‌ அரங்கேற்றப்படுகின்றன.



அந்த வகையில்‌ இந்தாண்டு பிப்‌.18-ம்‌ தேதி நடைபெறும்‌ மஹாசிவராத்திரி விழாவில்‌ தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம்‌, ராஜஸ்தான்‌ உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த பிரபல இசை கலைஞர்கள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

குறிப்பாக, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிரபல நாட்டுப்‌புற கலைஞர்‌ வேல்முருகன்‌, ராஜஸ்தானி நாட்டுப்‌புற கலைஞர்‌ மாமேகான்‌, இசையமைப்பாளரும்‌, பிரபல சித்தார்‌ இசை கலைஞருமான நிலத்ரி குமார்‌, டோலிவுட்‌ பின்னணி பாடகர்‌ ராம்‌ மிரியாலா உள்ளிட்டோர்‌ பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும்‌ விழிப்பாகவும்‌, விழிப்புணர்வாகவும்‌ வைத்து கொள்ள உள்ளனர்‌.



இது தவிர, கேரளாவைச்‌ சேர்ந்த 'தெய்யம்‌' நடன குழுவினர்‌, கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள்‌, ஜார்ஜியாவைச்‌ சேர்ந்த நடன கலைஞர்களும்‌ விழாவை ஆட்டம்‌, பாட்டத்துடன்‌ அதிர செய்ய உள்ளனர்‌.



பிப்ரவரி 18ஆம்‌ தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வானது, மறுநாள்‌ காலை 6 மணி வரை நடைபெறும்.‌ இவ்விழா ஈஷாவின்‌ அதிகாரப்பூர்வ யூ - டியூப்‌ சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்‌.



மேலும்‌, தமிழ்‌, இந்தி, ஆங்கிலம்‌, தெலுங்கு, கன்னடம்‌, மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில்‌ முன்னணி தொலைக்காட்சிகள்‌ மற்றும்‌ யூ - டியூப்‌ சேனல்களிலும்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...