கோவை மாவட்டம் வால்பாறையில் கருமலை எஸ்டேட்டை சேர்ந்த முனியசாமி, அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் இருசக்கர வாகனத்தை அடித்து சேதப்படுத்தியுள்ளார். தட்டிக்கேட்ட பெண்ணின் கையையும் அடித்து உடைத்த போதை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் வேலை செய்து வரும் மாடசாமி. இவரது மகன் முனியசாமி (வயது 26) மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் அருகே உள்ள பாலமுருகன் என்பவரிடம், அவரது பைக்கை கேட்டுள்ளார். அப்போது அவர், தனது பைக்கை தர மறுத்ததால் கோபமடைந்த முனியசாமி, பைக்கை கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய பாலமுருகனின் அப்பா அம்மாவையும் தாக்கிய முனியசாமி, அம்மாவின் கையையும் உடைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பாலமுருகன் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அப்போது வீட்டின் அருகே உள்ள பாலமுருகன் என்பவரிடம், அவரது பைக்கை கேட்டுள்ளார். அப்போது அவர், தனது பைக்கை தர மறுத்ததால் கோபமடைந்த முனியசாமி, பைக்கை கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய பாலமுருகனின் அப்பா அம்மாவையும் தாக்கிய முனியசாமி, அம்மாவின் கையையும் உடைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பாலமுருகன் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.