கோவை அருகே இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி விபத்து - இளம்பெண் உட்பட 2 பேர் படுகாயம்

கோவை துடியலூர் அருகே இளைஞர் ஓட்டிவந்த ஆடி கார், அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில், இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கேரளா மாநிலம் ஆனைகட்டி சேர்ந்தவர் விஷ்ணு (வயது 26) இவர் நேற்று தனது ஆடி காரை ஓட்டிக்கொண்டு வடமதுரையில் இருந்து பழனி கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் வேகமாக சென்றுள்ளார். அவருடன் துடியலூர் சேர்ந்த சையது முகமது (வயது30) கேரளா ஆனைகட்டி அகழி பகுதியைச் சேர்ந்த மிதுனியம் (வயது 27), ஆகியோரும் சென்றுள்ளனர்.



அதிவேகமாக சென்ற கார், பழனிகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அஜய் (வயது 29), என்பவர் மீது மோதி, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கோவை ரோஸ்கார்டன் தென்றல் நகரை சேர்ந்த சசிரேகா (வயது 29) என்ற பெண் மீதும் மோதியது.



இந்த விபத்தில், சசிரேகா பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜய் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் போலீசார், காரை ஓட்டி வந்த விஷ்ணுவைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கார் கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதி சாலை ஓரத்தில் இருந்த புதருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...