பேரூர் பெரியகுளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் - மருந்தக உரிமையாளருக்கு அபராதம்

கோவை பேரூர் பெரியகுளத்தில் தடையை மீறி மருத்துவ கழிவுகளைக் கொட்டிய தனியார் மருந்தக உரிமையாளருக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.



கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குளத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டியவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் இயங்கி வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் பெரிய குளக்கரையில் மாயாவாக்கி (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று வழக்கம் போல மரக்கன்றுகள் பராமரிப்பு பணிக்காக அவ்வமைப்பினர் சென்ற போது, குளக்கரையில் மாத்திரைகள், மருந்து என மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தன்னார்வலர்கள் உடனடியாக அவற்றைப் புகைப்படம் எடுத்து, பேரூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். மேலும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திலிருந்த தனியார் மருந்தக ரசீதுகளை ஒப்படைத்தனர்.



இதையடுத்து விசாரித்த செயல் அலுவலர் ஸ்ரீ அழகு பார்மா என்ற தனியார் மருந்தகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்நிலையில் பேரூர் பெரிய குளக்கரையில் மருத்துவ கழிவுகளைக் கொட்டிய மருந்தக உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத்துறை அதிகபட்ச அபராதம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...