பேரூர் பெரியகுளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் - மருந்தக உரிமையாளருக்கு அபராதம்

கோவை பேரூர் பெரியகுளத்தில் தடையை மீறி மருத்துவ கழிவுகளைக் கொட்டிய தனியார் மருந்தக உரிமையாளருக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.



கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குளத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டியவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் இயங்கி வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் பெரிய குளக்கரையில் மாயாவாக்கி (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று வழக்கம் போல மரக்கன்றுகள் பராமரிப்பு பணிக்காக அவ்வமைப்பினர் சென்ற போது, குளக்கரையில் மாத்திரைகள், மருந்து என மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தன்னார்வலர்கள் உடனடியாக அவற்றைப் புகைப்படம் எடுத்து, பேரூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். மேலும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திலிருந்த தனியார் மருந்தக ரசீதுகளை ஒப்படைத்தனர்.



இதையடுத்து விசாரித்த செயல் அலுவலர் ஸ்ரீ அழகு பார்மா என்ற தனியார் மருந்தகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்நிலையில் பேரூர் பெரிய குளக்கரையில் மருத்துவ கழிவுகளைக் கொட்டிய மருந்தக உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத்துறை அதிகபட்ச அபராதம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...