பிரபாகரன் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி..! - சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பேச்சு

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று ஈரோட்டில் மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு.



ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது.

ஒன்றிய அரசின் 2023-24 நிதி நிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை காப்பதற்கான அறிக்கையாகும். இது ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அறிக்கையாகும். 2014இல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை முதல் எம்.பி. சுப்புராயனும், நானும் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

மேலும் மகாத்மா காந்தி திட்டத்திற்கு நிதி குறைப்பை கண்டித்து வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதி அனைத்து இடங்களிலும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெறும். தொடர்ந்து டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் மீண்டும் போடப்படுவதாக இருந்தால் எதிர்ப்போம். இல்லாததை சொல்லி எடப்பாடி பழனிசாமி பிரச்னைகளை திசை திருப்ப முயல்கிறார். திமுக-வில் உள்ள தோழமை கட்சிகளும், இடது சாரி கட்சிகளும் திமுக செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவில்லை, வாய்மூடி மவுனியாக இருப்பதாக எடப்பாடி சொல்கிறார். அவர் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவரும், அவருடைய கட்சியும் வாய்மூடி மவுனியாகத்தான் இருக்கிறது.

பா.ஜ.க.வின் கொத்தடிமையாக அதிமுக மற்றும் எடப்பாடி இருக்கிறார். வேட்பாளரையே பா.ஜ.க.வை கேட்டுத் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறது. இப்படிப்பட்டவர் எங்களை பற்றி விமர்சிக்க உரிமை இல்லை.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...