புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வி பெற 20,995 பேர் அடையாளம் - கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தகவல்

கோவையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வியறிவு பெற 20,995பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க 1,558மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தகவல்.


கோவை : மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வியறிவு பெற 20 ஆயிரத்து 995 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - NILP (2022 - 2027) என்கின்ற வயது வந்தோருக்கான புதிய கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இவர்களுக்கான பயிற்சி கையேடு தொலைநோக்கு பார்வையுடன் மிகச் சிறப்பான முறையில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். சுமார் 200 மணி நேரம் கற்பித்தல் நிகழும். பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிராமம், நகர் பகுதிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியானது தற்போது கோவையில் மாவட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையில் 20,995 பேர் எழுத படிக்கத் தெரியாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நபர்களுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்குவதற்கான நடவடிக்கையாக, பள்ளி வளாகங்கள் மற்றும் பணியிடங்களை உள்ளடக்கிய 1,558 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமக்ரா சிக்ஷாவின் கீழ் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் இந்த நபர்களுக்கு அந்தந்த மையங்களில் கல்வி கற்பிக்கின்றனர்.

இந்த பயிற்சில் அடிப்படைக் கல்வியாக, அடிப்படை மெய் எழுத்துக்கள், எண்கள் மற்றும் பிற முதன்மை எண்ணிக்கையில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை உள்ளடக்கியது ஆகும். மேலும் கூடுதலாக அடிப்படை உரிமைகள், இந்திய தேர்தல் பதிவு, வங்கி/ தபால் அலுவலகம்/ ரயில்வே ஆவணங்கள் மற்றும் சட்ட ஆவணங்கள் ஆகியவை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து கற்பிக்கப்படும்.

இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு தமிழக அரசு அறிமுகக் கல்விக்கான கிட்டுகளை வழங்கியுள்ளது. மேலும் கோவையில் அடையாளம் காணப்பட்ட 20,995 நபர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (NILP)பயனளிக்கிறது.

இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எழுத்தறிவுத் திட்டத்தில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வகையில், ஒதுக்கப்பட்ட வகுப்பறை மையங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் முழுவதும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...