புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வி பெற 20,995 பேர் அடையாளம் - கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தகவல்

கோவையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வியறிவு பெற 20,995பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க 1,558மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தகவல்.


கோவை : மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வியறிவு பெற 20 ஆயிரத்து 995 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - NILP (2022 - 2027) என்கின்ற வயது வந்தோருக்கான புதிய கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இவர்களுக்கான பயிற்சி கையேடு தொலைநோக்கு பார்வையுடன் மிகச் சிறப்பான முறையில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். சுமார் 200 மணி நேரம் கற்பித்தல் நிகழும். பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிராமம், நகர் பகுதிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியானது தற்போது கோவையில் மாவட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையில் 20,995 பேர் எழுத படிக்கத் தெரியாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நபர்களுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்குவதற்கான நடவடிக்கையாக, பள்ளி வளாகங்கள் மற்றும் பணியிடங்களை உள்ளடக்கிய 1,558 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமக்ரா சிக்ஷாவின் கீழ் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் இந்த நபர்களுக்கு அந்தந்த மையங்களில் கல்வி கற்பிக்கின்றனர்.

இந்த பயிற்சில் அடிப்படைக் கல்வியாக, அடிப்படை மெய் எழுத்துக்கள், எண்கள் மற்றும் பிற முதன்மை எண்ணிக்கையில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை உள்ளடக்கியது ஆகும். மேலும் கூடுதலாக அடிப்படை உரிமைகள், இந்திய தேர்தல் பதிவு, வங்கி/ தபால் அலுவலகம்/ ரயில்வே ஆவணங்கள் மற்றும் சட்ட ஆவணங்கள் ஆகியவை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து கற்பிக்கப்படும்.

இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு தமிழக அரசு அறிமுகக் கல்விக்கான கிட்டுகளை வழங்கியுள்ளது. மேலும் கோவையில் அடையாளம் காணப்பட்ட 20,995 நபர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (NILP)பயனளிக்கிறது.

இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எழுத்தறிவுத் திட்டத்தில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வகையில், ஒதுக்கப்பட்ட வகுப்பறை மையங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் முழுவதும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...