கோவை குடிசை மாற்று வாரிய காவலருக்கு ஊதியம் தராத அதிகாரிகள் - பாதிக்கப்பட்டவர் ஆட்சியரிடம் மனு!

கோவை மாவட்டம் கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் காவலராக பணியாற்றி வந்த காளிமுத்துவுக்கு, அங்கு பணியாற்றும் மேஸ்திரியும், AEEயும் இணைந்து ஊதியத்தை தராமல் ஏமாற்றி வருவதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் கீரணத்தம் குடிசை மாற்று வாரிய காவலாளிக்கு ஊதியம் தராமல் அதிகாரிகள் ஏமாற்றுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கீரணத்தம் பகுதியில் உள்ள அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருபவர் காளிமுத்து. அங்கு AEE-ஆக சுதர்சனன் என்பவரும், மேஸ்திரியாக குப்புராஜ் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், காளிமுத்து காவலாளியாக மட்டுமல்லாமல் கீரணத்தம் திட்ட பகுதியில் பராமரிப்பு பணிகளையும் தினக்கூலி அடிப்படையில் செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மேஸ்திரி குப்புராஜ் பராமரிப்பு பணிக்கான ஊதியத்தையும் காவலாளியாக பணிபுரிந்த ஊதியத்தையும் கொடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை கேட்டும் ஊதியத்தை தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதற்கு சுதர்சனனும் உடந்தை எனவும் கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட காளிமுத்து மன உளைச்சலுக்கு ஆளாகி தனது குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர், இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் குணமடைந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், காளிமுத்து தனது குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனக்கு சேர வேண்டிய ஊதியத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...