கோவை குடிசை மாற்று வாரிய காவலருக்கு ஊதியம் தராத அதிகாரிகள் - பாதிக்கப்பட்டவர் ஆட்சியரிடம் மனு!

கோவை மாவட்டம் கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் காவலராக பணியாற்றி வந்த காளிமுத்துவுக்கு, அங்கு பணியாற்றும் மேஸ்திரியும், AEEயும் இணைந்து ஊதியத்தை தராமல் ஏமாற்றி வருவதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் கீரணத்தம் குடிசை மாற்று வாரிய காவலாளிக்கு ஊதியம் தராமல் அதிகாரிகள் ஏமாற்றுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கீரணத்தம் பகுதியில் உள்ள அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருபவர் காளிமுத்து. அங்கு AEE-ஆக சுதர்சனன் என்பவரும், மேஸ்திரியாக குப்புராஜ் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், காளிமுத்து காவலாளியாக மட்டுமல்லாமல் கீரணத்தம் திட்ட பகுதியில் பராமரிப்பு பணிகளையும் தினக்கூலி அடிப்படையில் செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மேஸ்திரி குப்புராஜ் பராமரிப்பு பணிக்கான ஊதியத்தையும் காவலாளியாக பணிபுரிந்த ஊதியத்தையும் கொடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை கேட்டும் ஊதியத்தை தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதற்கு சுதர்சனனும் உடந்தை எனவும் கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட காளிமுத்து மன உளைச்சலுக்கு ஆளாகி தனது குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர், இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் குணமடைந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், காளிமுத்து தனது குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனக்கு சேர வேண்டிய ஊதியத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...