கோவையில் வடமாநில தொழிலாளி கொலை - மது குடிக்கச் சென்றபோது விபரீதம்!

கோவை விளாங்குறிச்சியில் மதுகுடிக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பில்ட்ராம் என்பவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக ஜெயின் அனேனா அப்பார்ட்மெண்டில் தங்கி கட்டிட வேலை செய்துவரும் பீகார் மாலைத்தைச் சேர்ந்த பில்ட்ராம் (வயது35 ). பில்ட்ராம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் காலை 7 மணி அளவில் மது குடிக்க சென்றுள்ளார்.

அப்போது, அங்கு இருந்த ஒருவர் பில்ட்ராம் பாக்கெட்டில் இருந்த பணத்தை ஒருவர் பிடுங்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவரை பில்ட்ராம் தடுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த நபர் கையால் தாக்கியதில் பில்ட்ராம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இடது பின்தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் இறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பில்ட்ராமை மது போதையில் கீழே தள்ளிவிட்டவர் யார் என்றுசரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...