மேட்டுப்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்தில் கேஸ் கசிவு - மூச்சுத் திணறால் ஏற்பட்டு பொதுமக்கள் மயக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென குளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மயக்கமடைந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, அங்குள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு,33 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அப்படி சுத்திகரிப்பு செய்யும் போது தண்ணீரினை சுத்தம் செய்ய குளோரின் சரியான விகிதத்தில் நகராட்சி ஊழியர்களால் கலக்கப்படும். அந்த வகையில், இன்று காலை தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய குளோரின் சிலிண்டரை அங்குள்ள ஊழியர்கள் திறந்தபோது, அது பயங்கர சப்தத்துடன் வெடித்து குளோரின் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.



இதனால், அங்கு குடியிருக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிலர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மயக்கமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாயுக் கசிவினைசரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அடிக்கடி சிறிய அளவில் வாயுக் கசிவு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது பெரிய அளவில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஏற்பட்டுள்ளதாகவும், நகராட்சி ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள்கூட வழங்கவில்லை எனவும்கூறி அந்த பகுதி மக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...