முதல்வர் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டி - உடுமலை அரசுக் கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

திருப்பூரில் முதலமைச்சர் கோப்பைக்காக நடத்தப்பட்ட கைப்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகை, கோப்பை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றது.

இதில், 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள்கலந்துகொண்டு விளையாடின. இறுதிப் போட்டியில், உடுமலை அரசு கலைக் கல்லூரி அணி மற்றும் KGI கலைஅறிவியல் கல்லூரி அணி மோதின.

முதல் சுற்றில், 25-18, 2வது சுற்றில் 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் உடுமலை அரசு கலைக் கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இதைத்தொடர்ந்து, உடுமலை அரசு கலைக் கல்லூரி அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் கல்யாணி, உடற்கல்வி இயக்குநர் மனோகர் செந்தூர் பாண்டியன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணியின் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....