முதல்வர் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டி - உடுமலை அரசுக் கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

திருப்பூரில் முதலமைச்சர் கோப்பைக்காக நடத்தப்பட்ட கைப்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகை, கோப்பை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றது.

இதில், 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள்கலந்துகொண்டு விளையாடின. இறுதிப் போட்டியில், உடுமலை அரசு கலைக் கல்லூரி அணி மற்றும் KGI கலைஅறிவியல் கல்லூரி அணி மோதின.

முதல் சுற்றில், 25-18, 2வது சுற்றில் 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் உடுமலை அரசு கலைக் கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இதைத்தொடர்ந்து, உடுமலை அரசு கலைக் கல்லூரி அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் கல்யாணி, உடற்கல்வி இயக்குநர் மனோகர் செந்தூர் பாண்டியன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணியின் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...