காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது கருப்பு மை ஊற்றி அழித்ததால் பரபரப்பு

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது விஸ்வஜன முன்னேற்றக் கழகத்தினர் கருப்பு மை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகியவற்றின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.



இந்நிலையில் இந்த ஓவியங்களில் கோவலன் மரணத்திற்கும், திருடியதிற்கும், பொற்கொல்லர்கள் தான் காரணம் என்பதைப் போன்று பொற்கொல்லரை இழிவுபடுத்தி தவறாகச் சித்தரித்து, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகக் கூறி விஸ்வஜன முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினர் காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மீது கருப்பு மையை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் ஓவியங்களை மையை ஊற்றி அளிப்பதை வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்து அதனையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஓவியர்களைக் கொண்டு மிக நேர்த்தியாகச் சிரமப்பட்டு வரையப்பட்ட ஓவியத்தை சில நொடிகளில் அளித்து சின்னாபின்னம் ஆக்கிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவல் நிலையம் எதிரே உள்ள தூண்களில் வரைந்த ஓவியத்தை ஆட்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரத்தில் மையை ஊற்றி நாசப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...