காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது கருப்பு மை ஊற்றி அழித்ததால் பரபரப்பு

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது விஸ்வஜன முன்னேற்றக் கழகத்தினர் கருப்பு மை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகியவற்றின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.



இந்நிலையில் இந்த ஓவியங்களில் கோவலன் மரணத்திற்கும், திருடியதிற்கும், பொற்கொல்லர்கள் தான் காரணம் என்பதைப் போன்று பொற்கொல்லரை இழிவுபடுத்தி தவறாகச் சித்தரித்து, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகக் கூறி விஸ்வஜன முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினர் காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மீது கருப்பு மையை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் ஓவியங்களை மையை ஊற்றி அளிப்பதை வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்து அதனையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஓவியர்களைக் கொண்டு மிக நேர்த்தியாகச் சிரமப்பட்டு வரையப்பட்ட ஓவியத்தை சில நொடிகளில் அளித்து சின்னாபின்னம் ஆக்கிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவல் நிலையம் எதிரே உள்ள தூண்களில் வரைந்த ஓவியத்தை ஆட்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரத்தில் மையை ஊற்றி நாசப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...