காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது கருப்பு மை ஊற்றி அழித்ததால் பரபரப்பு

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது விஸ்வஜன முன்னேற்றக் கழகத்தினர் கருப்பு மை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகியவற்றின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.



இந்நிலையில் இந்த ஓவியங்களில் கோவலன் மரணத்திற்கும், திருடியதிற்கும், பொற்கொல்லர்கள் தான் காரணம் என்பதைப் போன்று பொற்கொல்லரை இழிவுபடுத்தி தவறாகச் சித்தரித்து, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகக் கூறி விஸ்வஜன முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினர் காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மீது கருப்பு மையை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் ஓவியங்களை மையை ஊற்றி அளிப்பதை வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்து அதனையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஓவியர்களைக் கொண்டு மிக நேர்த்தியாகச் சிரமப்பட்டு வரையப்பட்ட ஓவியத்தை சில நொடிகளில் அளித்து சின்னாபின்னம் ஆக்கிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவல் நிலையம் எதிரே உள்ள தூண்களில் வரைந்த ஓவியத்தை ஆட்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரத்தில் மையை ஊற்றி நாசப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...