மேட்டுப்பாளையம் அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

கோபனாரி பிரிவு வனப்பகுதி அருகே மாடுமேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை, வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.



கோவை: வெள்ளியங்காடு மூணுகுட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு மூணுகுட்டை பகுதியை சேர்ந்தவர் கருப்பாத்தாள் (59). கால்நடைகளை மேய்த்து வந்தார். இந்நிலையில் இன்று தனது மாடுகளை கோபனாரி பிரிவு வனப்பகுதி அருகே மேய்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது மாடுகள் தண்ணீர் தேடி அருகே உள்ள ஓடைக்குச் சென்றுள்ளது. இதையடுத்து மாடுகளை திருப்பிவிட கருப்பாத்தாள் வனப்பகுதிக்குள் சென்றபோது அங்குத் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை கருப்பாத்தாளை தாக்கியுள்ளது.



இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மற்றும் வன ஊழியர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

மேலும் காரமடை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கருப்பாத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...