கோவைப்புதூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்ததால் பரபரப்பு

தஞ்சாவூரிலிருந்து நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கோசாலைக்கு வைக்கோல் ஏற்றி வந்த லாரி புதூர் 100 அடி சாலை அருகே வந்தபோது, சாலையின் மேலே சென்ற மின் கம்பி உராய்ந்ததில் வைக்கோலில் தீப்பிடித்தது.



கோவை: கோவைப்புதூர் அருகே சாலையில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிராங்கிளின். இவர் தஞ்சாவூரிலிருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு, கோவை நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கோசாலைக்கு வந்துள்ளார்.



லாரி கோவைப்புதூர் 100 அடி சாலை அருகே வந்தபோது, சாலையின் மேலே சென்ற மின் கம்பி உராய்ந்ததில் வைக்கோலில் தீப்பிடித்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து வைக்கோல் கட்டுகளில் தீ பரவியதால் சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அதே பகுதியில் தீயணைப்பு நிலையமும் அமைந்துள்ளதால் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பிடித்த ஒரு சில வைக்கோல் கட்டுகளை அகற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...