கோவையில் திருநங்கைகள் சமையல் கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற உணவுத் திருவிழா

தமிழகத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்த சமூக நலத்துறை சார்பில் உணவு திருவிழா நடத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு திருநங்கைகள் கோரிக்கை.



கோவை: பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உணவுத் திருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்ட திருநங்கைகள் சமையல் கலைஞர்கள் சார்பில் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உணவுத் திருவிழா நடைபெற்றது.



பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு உணவு திருவிழாவை தொடங்கி வைத்து சிறந்த திருநங்கை சமையல் கலைஞர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் கோப்பைகளை வழங்கினர்.



கோவை பொள்ளாச்சியில் உள்ள ஏராளமான திருநங்கை சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு 20 வகையான சைவம் மற்றும் அசைவ உணவை தயாரித்தனர் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான உணவுகளை ரசித்தும் ருசித்து உண்டதோடு பார்சல்கள் பெற்று சென்றனர்.



கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் பெரும்பாலான திருநங்கைகள் சமையல் தொழில் செய்து தொழில் முனைவோர்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து தொழிலில் ஆர்வம் காட்டி வருகின்றனர் தமிழக அரசு திருநங்கைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திருநங்கைகளை ஊக்குவிக்க சமூக நலத்துறை உதவியுடன் திருநங்கைகள் உணவு திருவிழாவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...