கோவையில் திருநங்கைகள் சமையல் கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற உணவுத் திருவிழா

தமிழகத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்த சமூக நலத்துறை சார்பில் உணவு திருவிழா நடத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு திருநங்கைகள் கோரிக்கை.



கோவை: பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உணவுத் திருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்ட திருநங்கைகள் சமையல் கலைஞர்கள் சார்பில் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் திருநங்கைகளின் சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக உணவுத் திருவிழா நடைபெற்றது.



பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு உணவு திருவிழாவை தொடங்கி வைத்து சிறந்த திருநங்கை சமையல் கலைஞர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் கோப்பைகளை வழங்கினர்.



கோவை பொள்ளாச்சியில் உள்ள ஏராளமான திருநங்கை சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு 20 வகையான சைவம் மற்றும் அசைவ உணவை தயாரித்தனர் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான உணவுகளை ரசித்தும் ருசித்து உண்டதோடு பார்சல்கள் பெற்று சென்றனர்.



கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் பெரும்பாலான திருநங்கைகள் சமையல் தொழில் செய்து தொழில் முனைவோர்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து தொழிலில் ஆர்வம் காட்டி வருகின்றனர் தமிழக அரசு திருநங்கைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திருநங்கைகளை ஊக்குவிக்க சமூக நலத்துறை உதவியுடன் திருநங்கைகள் உணவு திருவிழாவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...