பரோட்டாவை தொடர்ந்து, ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏற்கனவே பரோட்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி வாக்கு சேகரித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர்கள் கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக அரசு கொண்டு வந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கான மற்றும் மாணவ, மாணவிகளுக்கான ஏராளமான நலத்திட்டங்களை பட்டியலிட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.



இந்நிலையில், ஈரோடு வள்ளலார் வீதி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார். அப்போது, உடற்பயிற்சி செய்தவாரே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார்.



உடற்பயிற்சி செய்து ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்த அமைச்சரின் செயல் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே, பரோட்டா கடையில் பரோட்டா போட்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...