தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகள் ரூ.4.25 கோடிக்கு சமரசம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வகையான 117 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ.4.25 கோடிக்கு சமரசம் செய்து வைக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகள் ரூ.4.25 கோடிக்கு சமரசம் செய்து வைக்கப்பட்டன.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி தாராபுரம் வட்ட சட்டப் பணி குழுவின் சார்பில் தேசிய மக்கள் சிறப்பு நீதிமன்றம், தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

தாராபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.நாகரஜன் தலைமை தாங்கிய நிலையில், வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு, ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜ், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு, நீதிபதி மதிவதனி வழங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 24 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 79 உரிமையியல் வழக்குகள், ஜிவனாம்ச வழக்குகள் 4, குடும்ப வன்முறை, மணி சூட் 1, குடும்ப வழக்கு 1, செக் மோசடி வழக்குகள் 4 என குற்றவியல் சிறு குற்றங்கள் உள்ளிட்ட 117 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.4 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரத்துக்கான சமரச தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குக்கான சான்றிதழ்களை வட்ட சட்ட பணிக்குழு நீதிபதி எம்.தர்மபிரபு பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் மூலனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த மோகன் ராஜ் (45) கடந்த 2018-ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தார். இவருடைய மனைவி பீலா புனிதவதி தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை வழக்கறிஞர் எஸ்.டி.சேகர் வாதாடி வந்ததையடுத்து நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் இறந்து போன மோகன் ராஜூக்கு அதிகபட்சமாக காப்பீட்டுத் தொகையாக ரூ.95 லட்சத்தை அவருடைய மனைவி பீலா புனிதவதி மற்றும் மகள், தாயார் ஆகியோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வாதாடி பெற்று தந்த வழக்கறிஞர் கோவி இளஞ்செழியன் மற்றும் எஸ்.டி.சேகருக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. இந்நிகழ்வில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செழியன் மற்றும் செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...