நீலகிரி முதுமலை தெப்பக்காடு பகுதியில் உலா வந்த புலி - பொதுமக்கள் அச்சம்!

முதுமலை தெப்பக்காடு பகுதியில் சமீபத்தில் பெண் ஒருவரை புலி அடித்து கொன்ற நிலையில், தெப்பக்காடு ஆற்றங்கரையோரத்தில் புலி ஒன்று உலா வந்ததை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் உலா வந்த புலியால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

முதுமலை தெப்பக்காடு அடுத்த யானைபாடி பகுதியை சேர்ந்த மாரி என்ற பெண்மணி வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற போது, புலி தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெப்பக்காடு, யானைப்பாடி பகுதியில் புலியை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் 4 புலிகள் நடமாடுவது கேமராவில் பதிவான நிலையில் பெண்ணை தாக்கிய புலி எது என கண்டறிய வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.



இதனிடையே நேற்று மாலை தெப்பக்காடு ஆற்றங்கரையோரம் புலி உலா வந்ததுள்ளது. இதை கண்ட கிராமத்தினர் பெண்ணை தாக்கிய புலியாக இருக்கலாம் என மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், புலா உலா வந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...