திருப்பூர் உடுமலையில் மக்கள் நீதிமன்றம் - 158 வழக்குகளுக்கு சுமார் ரூ.4 கோடிக்கு தீர்வு

உடுமலையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 158 வழக்குகளுக்கு சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 158 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கச்சேரி வீதியில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றம் 4 அமர்வுகளாக நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன் ஜே.எம் 1 நிதிபதி விஜயகுமார், ஜே.எம். 2 நிதிபதி மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அதன்படி சிறு குற்றத்துக்குரிய 77 வழக்குகள் ஒரு லட்சத்து 22ஆயிரத்து 200க்கும், காசோலை மோசடி குறித்த 22 வழக்குகளில் பத்து வழக்குகளுக்கு ரூ.42 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் தீர்வு காணப்பட்டது.

வங்கி வாராகடன் குறித்த 25 வழக்குகளில் 15 வழக்குகளுக்கு 63 லட்சத்து 66 ஆயிரத்து 608 ரூபாய்க்கும்,மோட்டார் வாகன விபத்துக்கள் குறித்த 95 வழக்குகளில் 42 வழக்குகள் ரூபாய் 2 கோடி 67 லட்சத்து 52 ஆயிரத்து 533க்கும் தீர்வு காணப்பட்டது.

மனமுறிவு தொடர்பான 10 வழக்குகளில் மூன்று வழக்குகள் இரண்டு லட்சத்து 38 ஆயிரத்துக்கும், இதர சிவில் வழக்குகள் 52-ல் 11 வழக்குகள் 81 லட்சத்து 18 ஆயிரத்து 546 ரூபாய்க்கும் தீர்வு காணப்பட்டன.

மொத்தம் 281 வழக்குகள் எடுக்கப்பட்டு 158 வழக்குகளுக்கு நான்கு கோடியே 58 லட்சத்து 72ஆயிரத்திற்கு 887 தீர்வு காணப்பட்டது.

இதில் அரசு வழக்கறிஞர்கள் சேதுராமன் ரவிச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் சத்தியவாணி உள்ளிட்ட இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள், மூத்த, இளம் வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...