வால்பாறை அருகே இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது - வாகன சோதனையில் சிக்கினார்!

வால்பாறை அருகே ஒருவாரத்திற்கு முன்பு விக்னேஷ் என்பவரது பைக் திருடப்பட்ட நிலையில், போலீசார் ஸ்டேன்மோர் பிரிவு கரும்பாலம் அருகே நடத்திய வாகன சோதனையில், திருடனை பிடித்து பைக்கை மீட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரண்டு சக்கர வாகனங்கள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசாரும் திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுகுனறா எஸ்டேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தை வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் உள்ள கடைவீதியில் நிறுத்தி வைத்திருந்துள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது, சிறிது நேரத்தில் இருசக்கர வாகனம் காணாமல் போனதாக தெரிகிறது. இதுதொடர்பாக உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காவல்துறையினர் ஸ்டேன்மோர் பிரிவு கரும்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முனிசாமி என்பவர் இருசக்கர வாகனம் ஒன்றை ஓட்டி வந்துள்ளார். அவரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.



சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் ஒருவாரத்திற்கு முன்பு திருடுபோன விக்னேஷின் வாகனம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து முனுசாமியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...