வால்பாறை அருகே இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது - வாகன சோதனையில் சிக்கினார்!

வால்பாறை அருகே ஒருவாரத்திற்கு முன்பு விக்னேஷ் என்பவரது பைக் திருடப்பட்ட நிலையில், போலீசார் ஸ்டேன்மோர் பிரிவு கரும்பாலம் அருகே நடத்திய வாகன சோதனையில், திருடனை பிடித்து பைக்கை மீட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரண்டு சக்கர வாகனங்கள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசாரும் திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுகுனறா எஸ்டேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தை வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் உள்ள கடைவீதியில் நிறுத்தி வைத்திருந்துள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது, சிறிது நேரத்தில் இருசக்கர வாகனம் காணாமல் போனதாக தெரிகிறது. இதுதொடர்பாக உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காவல்துறையினர் ஸ்டேன்மோர் பிரிவு கரும்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முனிசாமி என்பவர் இருசக்கர வாகனம் ஒன்றை ஓட்டி வந்துள்ளார். அவரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.



சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் ஒருவாரத்திற்கு முன்பு திருடுபோன விக்னேஷின் வாகனம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து முனுசாமியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...