உடுமலை அருகே விளைநிலங்களில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் - மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்!

உடுமலை அருகேயுள்ள சின்னவாளவாடி பகுதியில் விளைநிலத்தில் பஞ்சு கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் வெளியேறும் துர்நாற்றத்துடன் கூடிய புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை விளைநிலங்களுக்கு அருகே எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

உடுமலை அருகேயுள்ள சின்னவாளவாடி பகுதியில் சூரியப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது. இந்நிலையில் அவர், தனது நிலத்தை விவசாயம் செய்வதற்கு ஏற்றார்போல், உழுது தயாராக வைத்திருந்துள்ளார்.



இதனிடையே அந்த நிலத்தின் அருகில் வசிக்கும் நபர்கள் ஒருவித பஞ்சு கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல்வேறு கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டி இரவு நேரங்களில் தீ வைத்து எரித்து வருகின்றனர்.



இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் கடும் துர்நாற்றத்துடன் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் மூச்சுத் திணறால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளைநிலங்களில் மேயும் கால்நடைகள் மற்றும் விவசாய பயிர்களும் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார துறையினர் உடனடியாக சின்னவாளவாடி பகுதியில் உள்ள விளை நிலத்தில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...