திருப்பூர் உடுமலையில் கோடைக்கு முன்பே தர்பூசணி விற்பனை அமோகம்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சீசன் துவங்குவதற்கு முன்னதாகவே, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தர்பூசணி பழ விற்பனை அமோகமாக நடந்து வருவதாக வியாபாரிகள் கருத்து.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சீசனுக்கு முன்னதாகவே, தர்பூசணி விற்பனை களைகட்டி வருகிறது.

உடுமலை சுற்று வட்டார பகுதிகளுக்கு, கோடை காலத்தை சமாளிக்க, திண்டிவனம் உட்பட பகுதிகளில் இருந்து, தர்பூசணி விற்பனைக்காக, கொண்டு வரப்படுகிறது. இச்சீசனை இலக்கு வைத்து, உடுமலை பகுதியிலும், தர்பூசணி சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தை இலக்காக வைத்து, நுாற்றுக்கணக்கான ஏக்கரில், தர்பூசணி நடவு செய்யப்பட்டு, தொடர் மழையால், சில இடங்களில் பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிப்பு இல்லாத பகுதிகளில், அறுவடை இன்னமும் துவங்காத நிலையில், வழக்கத்தை விட முன்னதாகவே பிற மாநிலங்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது.



அதன்படி, ஆந்திராவில், இருந்து கிலோ, 20 ரூபாய் முதல் தர்பூசணி கொள்முதல் செய்யப்பட்டு, உடுமலை நகர பகுதியில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருவதால், வெளிமாநில தர்பூசணி விற்பனையும், களைகட்டி வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...