வெளிமாநிலத்தவரை பணியமர்த்தும் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - தாராபுரத்தில் மாவட்ட நீதிபதி கருத்து!

தாராபுரத்தில் நடைபெற்ற கொத்தடிமை முறை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய மாவட்ட நீதிபதி நாகராஜன், செங்கல் சேம்பர்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்தும் போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.


திருப்பூர்: வெளி மாநிலத்தவரை பணியமர்த்தும் போது விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என திருப்பூர் மாவட்ட நீதிபதி நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் அருகே வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கொத்தடிமைகள் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



தாராபுரம் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன் தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய கொத்தடிமை முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்று முகாம் நடைபெறும் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன் பேசியதாவது, செங்கல் சேம்பர்களில் பணியாற்றும் ஆண், பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசின் தொழிலாளர் நலத்துறையின் சட்ட திட்டத்தின் அனைத்து சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.

அவர்களது குழந்தைகள் அனைவருக்கும் உரிய கல்வியை அளிக்கும் நோக்கத்தில் அனைவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே தவிர குழந்தை தொழிலாளர்களாக அவர்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.

பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு ஏதாவது சான்றிதழ்கள் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தேவைப்படுகிறது என்றால், உடனடியாக சட்டப் பணிகள் குழு மூலம் தொடர்பு கொண்டால் அனைத்து உதவிகளும் விரைவாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் துணை இயக்குனர் எஸ் சந்தோஷ் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கண்ணன் தாராபுரம் மூத்த வழக்கறிஞர் எஸ் கே .கார்வேந்தன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பி. கலைச்செழியன், செயலாளர் வாரணவாசை,



மூத்த வழக்கறிஞர் செயற்குழு உறுப்பினர் ரஹ்மத்துல்லா, செங்கல் சேம்பர் தயாரிப்பாளர் சங்க மூத்த நிர்வாகி அர்ஜுனன் மற்றும் செங்கல் சேம்பர் உற்பத்தியாளர்கள் செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...