தாராபுரம் அருகே கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை - பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறையினர் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டார பகுதியில் டீ கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரும்பாலான கடைகளில் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசு அனுமதி இல்லாத நிறுவனங்களே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கடைகளில் வெளியில் தயாரிக்கப்படும் முருக்கு, மிக்சர், பிஸ்கெட்டுகள், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வாறு அரசு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் பொருளை தயாரிக்கும் போது அதன் காலாவதி தேதி மற்றும் உற்பத்தி தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்த பாக்கெட்டில் உள்ள லெபிளில் எதுவும் குறிப்பிடுவதில்லை.

இது குறித்து நகராட்சி, சுகாதார துறையினர் மற்றும் மாவட்ட உணவு கட்டுப்பாடு அலுவலர்கள் எவரும் மாதக்கணக்கில் ஆய்வு செய்ய வராமல் உள்ளனர். இதனால் கடை உரிமையாளர்களின் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தனியார் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பண்டங்களை வாங்கி உண்ணும் போது ஒரு விதமான வாடை வருவதுடன், அவற்றின் சுவை தன்மை மாறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் உடல் உபாதைளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உணவு பொருள் கட்டுப்பாட்டு துறையினர் உடனடியாக ஆய்வு மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...