தாராபுரம் அருகே கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை - பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறையினர் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டார பகுதியில் டீ கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரும்பாலான கடைகளில் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசு அனுமதி இல்லாத நிறுவனங்களே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கடைகளில் வெளியில் தயாரிக்கப்படும் முருக்கு, மிக்சர், பிஸ்கெட்டுகள், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வாறு அரசு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் பொருளை தயாரிக்கும் போது அதன் காலாவதி தேதி மற்றும் உற்பத்தி தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்த பாக்கெட்டில் உள்ள லெபிளில் எதுவும் குறிப்பிடுவதில்லை.

இது குறித்து நகராட்சி, சுகாதார துறையினர் மற்றும் மாவட்ட உணவு கட்டுப்பாடு அலுவலர்கள் எவரும் மாதக்கணக்கில் ஆய்வு செய்ய வராமல் உள்ளனர். இதனால் கடை உரிமையாளர்களின் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தனியார் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பண்டங்களை வாங்கி உண்ணும் போது ஒரு விதமான வாடை வருவதுடன், அவற்றின் சுவை தன்மை மாறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் உடல் உபாதைளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உணவு பொருள் கட்டுப்பாட்டு துறையினர் உடனடியாக ஆய்வு மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...