வால்பாறையில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரல் - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பாதுகாப்பாக நடமாட வேண்டுமென பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

வனப்பகுதியிலிருந்து இங்கு நுழையும் சிறுத்தைகள், வீடுகளில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு, பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி கொன்று தூக்கிச்செல்வது தொடர்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இந்த நிலையில், வால்பாறை காமராஜர் நகர் சாலை குடியிருப்பு பகுதியில் இருந்து இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையில் கடந்து சென்றது. இதனை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர்.



சாலையைக் கடக்கும் அந்தச் சிறுத்தை வனப்பகுதிக்குள் செல்வதுபோல் பதிவாகியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையடுத்து, புதுத்தோட்ட பகுதியில் இருந்து, வால்பாறைக்கு வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும்போது கவனமாக இருக்க வேண்டுமென வனத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும், வனவிலங்குகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...