வால்பாறை வனப்பகுதியில் கடும் வறட்சி எதிரொலி - வனத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு!

வால்பாறை வனச்சரகம் தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட எஸ்டேட் பகுதிகளில், அய்யர்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டப் பணியாளர்களை சந்தித்து காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு வருகிறது. இதனால், வனப்பகுதியில் காட்டுத் தீக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், கொண்டை ஊசி வளைவுடன் சாலையின் விளிம்புகள் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள காய்ந்த இலைகள் மற்றும் புதர்கள் காணப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டுகளை வீசுவதையோ அல்லது உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் தீ மூட்டுவதையோ தவிர்க்க வேண்டும்.



மேலும், வால்பாறை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராம் சுப்பிரமணி IFS மற்றும் துணை இயக்குனர் பார்கவதேஜா IFS, அறிவுரைப்படி வால்பாறை சரகம் வனச்சரக அலுவலர் வெங்கேட்ஷ் தலைமையில் காடு மற்றும் சாலை இடையே தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.



தற்பொழுது வரை சுமார் 50 கிலோமீட்டர் காடம்பாரை முதல் மாவடப்பு, அக்காமலை பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், வால்பாறை வனச்சரகம் தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட எஸ்டேட் பகுதிகளில், அய்யர்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டப் பணியாளர்களை சந்தித்து காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...