வால்பாறை வனப்பகுதியில் கடும் வறட்சி எதிரொலி - வனத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு!

வால்பாறை வனச்சரகம் தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட எஸ்டேட் பகுதிகளில், அய்யர்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டப் பணியாளர்களை சந்தித்து காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு வருகிறது. இதனால், வனப்பகுதியில் காட்டுத் தீக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், கொண்டை ஊசி வளைவுடன் சாலையின் விளிம்புகள் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள காய்ந்த இலைகள் மற்றும் புதர்கள் காணப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டுகளை வீசுவதையோ அல்லது உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் தீ மூட்டுவதையோ தவிர்க்க வேண்டும்.



மேலும், வால்பாறை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராம் சுப்பிரமணி IFS மற்றும் துணை இயக்குனர் பார்கவதேஜா IFS, அறிவுரைப்படி வால்பாறை சரகம் வனச்சரக அலுவலர் வெங்கேட்ஷ் தலைமையில் காடு மற்றும் சாலை இடையே தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.



தற்பொழுது வரை சுமார் 50 கிலோமீட்டர் காடம்பாரை முதல் மாவடப்பு, அக்காமலை பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், வால்பாறை வனச்சரகம் தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட எஸ்டேட் பகுதிகளில், அய்யர்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டப் பணியாளர்களை சந்தித்து காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...