கோவை தொழிலதிபரிடம் அத்துமீறி பணம் பறிப்பு - 2 திருநங்கைகள் கைது

கோவையில் தொழிலதிபரின் காரை வழிமறித்து, தகாத வார்த்தைகள் கூறி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கைகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்ற அவர், இரவு 11 மணியளவில் தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அருகே உள்ள ஏழாவது வீதியில் சென்றுகொண்டிருந்தார். அங்கு இருந்த வேகத்தடை முன்பாக மெதுவாக வாகனம் ஏறி இறங்கிய பொழுது, அருகாமையில் வந்தஇரண்டு அடையாளம் தெரியாத திருநங்கைகள், காரை மறித்து பிரதாப் சந்திரனை பணம் தரும்படி கேட்டுள்ளனர்.

மேலும், பணம் தர வற்புறுத்தி தகாத வார்த்தைகளைக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிரதாப் சந்திரன் பாக்கெட்டில் இருந்த 2000 ரூபாய் பணத்தையும் திருநங்கைகள் பறித்து சென்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பிரதாப் சந்திரன், இதுதொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வனிஷா, ரம்யா என்ற இரண்டு திருநங்கைகளை விசாரித்தனர்.அதில், பிரதாப் சந்திரன் குற்றம்சாட்டியது உண்மை எனத் தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...