கோவை தொழிலதிபரிடம் அத்துமீறி பணம் பறிப்பு - 2 திருநங்கைகள் கைது

கோவையில் தொழிலதிபரின் காரை வழிமறித்து, தகாத வார்த்தைகள் கூறி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கைகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்ற அவர், இரவு 11 மணியளவில் தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அருகே உள்ள ஏழாவது வீதியில் சென்றுகொண்டிருந்தார். அங்கு இருந்த வேகத்தடை முன்பாக மெதுவாக வாகனம் ஏறி இறங்கிய பொழுது, அருகாமையில் வந்தஇரண்டு அடையாளம் தெரியாத திருநங்கைகள், காரை மறித்து பிரதாப் சந்திரனை பணம் தரும்படி கேட்டுள்ளனர்.

மேலும், பணம் தர வற்புறுத்தி தகாத வார்த்தைகளைக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிரதாப் சந்திரன் பாக்கெட்டில் இருந்த 2000 ரூபாய் பணத்தையும் திருநங்கைகள் பறித்து சென்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பிரதாப் சந்திரன், இதுதொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வனிஷா, ரம்யா என்ற இரண்டு திருநங்கைகளை விசாரித்தனர்.அதில், பிரதாப் சந்திரன் குற்றம்சாட்டியது உண்மை எனத் தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...