கோவை தொழிலதிபரிடம் அத்துமீறி பணம் பறிப்பு - 2 திருநங்கைகள் கைது

கோவையில் தொழிலதிபரின் காரை வழிமறித்து, தகாத வார்த்தைகள் கூறி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கைகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்ற அவர், இரவு 11 மணியளவில் தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அருகே உள்ள ஏழாவது வீதியில் சென்றுகொண்டிருந்தார். அங்கு இருந்த வேகத்தடை முன்பாக மெதுவாக வாகனம் ஏறி இறங்கிய பொழுது, அருகாமையில் வந்தஇரண்டு அடையாளம் தெரியாத திருநங்கைகள், காரை மறித்து பிரதாப் சந்திரனை பணம் தரும்படி கேட்டுள்ளனர்.

மேலும், பணம் தர வற்புறுத்தி தகாத வார்த்தைகளைக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிரதாப் சந்திரன் பாக்கெட்டில் இருந்த 2000 ரூபாய் பணத்தையும் திருநங்கைகள் பறித்து சென்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பிரதாப் சந்திரன், இதுதொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வனிஷா, ரம்யா என்ற இரண்டு திருநங்கைகளை விசாரித்தனர்.அதில், பிரதாப் சந்திரன் குற்றம்சாட்டியது உண்மை எனத் தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...