குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் பெதப்பம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்குத் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் சாதிக் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர பாண்டியன் பேசியதாவது, கிராமப்புறங்களில் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார பணிகளை மேற்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான ஊதியம் குடிமங்கலம் ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்து சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந்தக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், திவ்யா, முருகன், முருகானந்தம், செல்வராஜ் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...