குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் பெதப்பம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்குத் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் சாதிக் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர பாண்டியன் பேசியதாவது, கிராமப்புறங்களில் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார பணிகளை மேற்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான ஊதியம் குடிமங்கலம் ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்து சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந்தக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், திவ்யா, முருகன், முருகானந்தம், செல்வராஜ் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...