குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் பெதப்பம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்குத் துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் சாதிக் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர பாண்டியன் பேசியதாவது, கிராமப்புறங்களில் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார பணிகளை மேற்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான ஊதியம் குடிமங்கலம் ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்து சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந்தக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், திவ்யா, முருகன், முருகானந்தம், செல்வராஜ் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...