கோவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலைநேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்கம்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பள்ளிகளில்‌ மாலை நேர சிறப்பு வகுப்புகளில்‌ பங்கேற்கும்‌ 10, 11, 12-ம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரச்‌ சிற்றுண்டி வழங்கும்‌ நிகழ்வினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 28 அரசுப் பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ 10, 11, 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு மார்ச்‌, ஏப்ரல்‌ 2023-ல்‌ நடைபெறவுள்ளது.

அரசு பொதுத்‌ தோ்வுகளை எதிர்கொள்ளத் தயார்‌ செய்யும்‌ பொருட்டு மாலை நேர சிறப்பு வகுப்புகளில்‌ பங்கேற்கும்‌ 5,608 மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரச்‌ சிற்றுண்டி வழங்கும்‌ நிகழ்வினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.



இந்நிகழ்ச்சியில்‌ வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதாரவேல்‌, மாநகராட்சி கல்வி அலுவலர்‌ ஜி.மரிய செல்வம்‌, உதவி ஆணையர்‌ மோகனசுந்தரி, மற்றும்‌ பள்ளி ஆசிரியாகள்‌ மற்றும்‌ மாணவ, மாணவியர்கள்‌ கலந்து கொண்டனர்‌.



மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள்‌ மாநில அளவில்‌ நடைபெற்ற பள்ளி கலைத் திருவிழாவில்‌ கலந்து கொண்டு பிறவகை குழு நடனத்தில்‌ பங்கேற்று முதலிடம்‌ பிடித்து வெற்றி பெற்றமைக்கான பாராட்டுச்‌ சான்றிதழ்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ வழங்கினார்கள்‌.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...