கோவை மாநகராட்சி பணிகளை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்குட்பட்ட வேலம்மாள் நகர் பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்நல மைய கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க கோரி அதிகாரிகளுக்கு ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்குட்பட்ட வேலம்மாள் நகர் பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்நல மைய கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண்.31-க்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் 24X7 குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



காமராஜபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக்கடையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,



அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துதரப் பொறியாளருக்கு அறிவுறுத்தி, குழந்தைகளுடன் கலந்துரையாடிய பின்பு, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வார்டு எண்.49-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், பொன்னையா நகர் பகுதியில் SRP திட்டத்தின்கீழ் ரூ.53.54 லட்சம் மதிப்பீட்டில் 607 மீட்டர் அப்பகுதியிலுள்ள தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் உள்ள தார் சாலையினையும், குப்பைகளையும் அகற்றி உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.64-க்குட்பட்ட புளியகுளம், ஜெயநாதன் வீதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் (TURIP 2022-2023) பேஸ்-1கீழ் 200 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவசாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வார்டு எண்.66-க்குட்பட்ட பந்தைய சாலை, டீ-எஸ்டேட் மற்றும் ஏ.டி.டி. சாலை சாலை பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து, அப்பகுதிகளில் உடனடியாக தார்சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்கள் முருகன், பார்த்திபன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...