ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்..! - பொள்ளாச்சி எம்.எல்.ஏ.ஜெயராமன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பளாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பனூர்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மதுரைவீரன் கோயில் வரை ரூபாய் 5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட்- கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.



இதில், முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முதன் முறையாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மாபெரும் வெற்றி பெற்றதுபோல, தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடியார் பக்கம் உள்ளது.

நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி, என்றார்.

எத்தனை அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தாலும் பொய் வதந்திகளை பரப்பினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இறுதி எஜமானர்கள் மக்கள்தான். நிச்சயம் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வார்கள்., என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...