ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்..! - பொள்ளாச்சி எம்.எல்.ஏ.ஜெயராமன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பளாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பனூர்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மதுரைவீரன் கோயில் வரை ரூபாய் 5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட்- கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.



இதில், முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முதன் முறையாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மாபெரும் வெற்றி பெற்றதுபோல, தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடியார் பக்கம் உள்ளது.

நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி, என்றார்.

எத்தனை அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தாலும் பொய் வதந்திகளை பரப்பினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இறுதி எஜமானர்கள் மக்கள்தான். நிச்சயம் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வார்கள்., என்றார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...