உடுமலையில் மூங்கில் தயாரிப்பு பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மூங்கிலால், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாய சாகுபடி பணிகளில், மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தன. விதை துாவுதல், அறுவடையின் போது விளைபொருட்களை சேகரித்தல், தானியங்களை சுத்தப்படுத்துதல் உட்பட அனைத்துப்பணிகளுக்கும், மூங்கில் கூடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தக்காளி பழங்களை, மூங்கில் கூடையில் அடுக்கி, சந்தைகளுக்கு எடுத்துச்செல்வார்கள். இவ்வாறு, ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் தவிர்க்க முடியாத பயன்பாட்டில் இருந்தன. பின்னர், பிளாஸ்டிக் பெட்டிகள் வேளாண் அறுவடை பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது.



மக்காச்சோளம் மற்றும் இதர தானிய சாகுபடிகளிலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்தது. இதனால், மூங்கில் கூடை பயன்பாடும், உற்பத்தியும் குறைந்து, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், உடுமலை நகரிலுள்ள தொழிலாளர்கள், பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் தொழிலை கைவிடாமல், உற்பத்தி பொருளையும் மாற்றி, வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.



தொழிலாளர்கள் கூறுகையில், கூடைகள் தயாரிப்பில், மூலப்பொருளான மூங்கில் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. இருப்பினும், புதிய வகை பொருட்கள் தயாரிப்பால், தொழிலை கைவிடாமல், தொடர்கிறோம்.

கண்காட்சி மற்றும் இதர வணிக பகுதியில், மூங்கிலால் ஆன பொருட்களை விற்பனை செய்ய, அரசு எங்களுக்கு தனியாக கடை ஒதுக்கினால், மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். விவசாயிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மூங்கில் கூடைகளை பயன்படுத்தினால், எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்,' என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...