கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் திடீர் நிறுத்தம் - மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவையில் முறையான திட்டமிடலின்றி ரூ.168 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் நிறுத்தப்பட்டு, அங்கு மாற்று பயன்பாட்டிற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



கோவை: கடந்த ஜனவரி 2020 ஆம் ஆண்டு கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே ரூ.168 கோடி மதிப்பீட்டில் 50 சதவீதம் அரசு மானியம் மற்றும் 50 சதவீதம் மாநகராட்சி பொது நிதி மூலம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் குப்பை கிடங்கு அருகே பேருந்து நிலையம் அமைவதால் சுதாகார சீர்கேடு ஏற்படும் மற்றும் போக்குவரத்துக்கு உகந்ததாக இருக்காது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் பேருந்து நிலைய கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டது.



இந்நிலையில், கோவையை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திட்டத்தில் பல்வேறு ஊழல் நடந்துள்ளதாகவும், முன்கூட்டியே பேருந்து நிலையம் அமைய உள்ளது எனக் கூறி பல ஏக்கர் நிலங்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாகவும் தெரிவித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.



மேலும், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டிடங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இக்கட்டிடத்தை மாற்று உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கான ஆலோசனை நடப்பதாகவும் தெரிவித்து கோவை மாநகராட்சியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் கைவிடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், சுகாதார பிரச்சனை மற்றும் போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லாத இடத்தில் வேண்டுமென்றே இத்திட்டம் அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வலியுறுத்தலின்பேரில் கொண்டுவரப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...