பல்லடத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து அரிவாள் முனையில் பணம் கொள்ளை - தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பெரும்பாலி பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான ஜெயமணி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு ஜெயமணி தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டதால் கதவை திறந்து பார்த்துள்ளார்.



அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் கையில் அரிவாளுடன் ஜெயமணியை மிரட்டி பீரோ சாவியை வாங்கி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது பேரனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஜெயமணி புகார் அளித்துள்ளார்.



இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் அரிவாலுடன் வீட்டுக்குள் புகுந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பல்லடம் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...